அழகான வரிகள் பத்து

*அழகான வரிகள் பத்து*.

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

3,நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச் சிறப்பானவர்கள்*

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*

7. சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*

8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்*

9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்*

10.  கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்*

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் 
ஒரு தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*

*எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும்*

இந்த நாள் இனிய நாள் .

🌺🌺🌹🌺💥🌹💥🌺

போராடித்தான் பாப்போமே

ஒரு குட்டிக் கதை...!!

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

போராடித்தான் பாப்போமே...

ஆறில் ஆரோக்கியம்

*ஆறில் ஆரோக்கியம் !*
------------------------------------------

*ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.*

*ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.*

*இதோ !*
----------------

*1 - பசி*
*2 - தாகம்*
*3 - உடல் உழைப்பு*
*4 - தூக்கம்*
*5 - ஓய்வு*
*6 - மன அமைதி*

*பசி !*
-----------

*உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.*

*யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.*

*இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்*

*"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்."*

*விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.*

*"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்*
*நோயள வின்றிப் படும்."*

*விளக்கம் - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.*

*பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !*

*உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.*

*இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.*

*தாகம் !*
----------------

*அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*

*வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*

*சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.*

*தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.*

*Ro, Mineral, Filter, boiled water பேராபத்து*

*இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.*

*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.*

*"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே"*

*என்பார்கள்*

*நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.*

*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.*

*உடல் உழைப்பு !*
-------------------------------

*ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.*

*இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.*

*உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.*

*தூக்கம் !*
------------------

*யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.*

*ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.*

*ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.*

*இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.*

*பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.*

*நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.*

*இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.*

*நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.*

*ஓய்வு !*
---------------

*சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.*

*சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.*

*உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.*

*மன நிம்மதி !*
--------------------------

*ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.*

*மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள்.  உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.*

*மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிட்டீர்கள்.*

*இனி எமன் உங்களை கண்டு அஞ்சுவார்.*

*ஆறு படியை கடந்தோம்*
*ஆரோக்கியத்தை அடைந்தோம்.*

*நன்றி*

நெகிழ வைக்கும் நெகிழி

*நெகிழ வைக்கும் நெகிழி*
Performance of Plastic

நெகிழி என்னும் பிளாஸ்டிக்கை மற்றவர் போல என்னாலும் எதிரியாக பார்க்க முடியவில்லை. ஏன்னென்றால் நம் வாழ்வில் தினம்தினம் உபயோகிக்கும் அத்தியாவசியமான ஒரு அங்கம் அது.

பிளாஸ்டிக்கை வைத்து எத்தனை எத்தனையோ பொருட்கள். சட்டை பொத்தானிலிருந்து சாட்டிலைட் வரை நெகிழி இல்லாத இடமே இல்லை. நெகிழியின் பயன்பாடு அளவற்றது.

நாம் நெகிழியை சரியான முறையில் கையாளவேண்டும். நெகிழி ஒரு ஆகசிறந்த கண்டுபிடிப்பாகவே நான் கருதுகிறேன். நெகிழியை வளைக்கமுடியும், நெளிக்கமுடியும், உடைக்க முடியும், கிழிக்க முடியும், விரிக்க முடியும், சுருக்க முடியும், நிறங்கள் கொடுக்க முடியும். இப்படி பல பரிமானங்களை கொண்ட தனித்துவமான பொருள்.

நெகிழி ஒரு யானை போல சரியாக பயன்படுத்திக்கொண்டால் பல உபயோகம் உண்டு.

பிளாஸ்டிக்கை ஒழிக்கிறேன் பேர்வழிகள் செய்வது என்ன? ஒரு இடத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து முறையாக குப்பை தொட்டியில் போடுவார். "ஆகா எப்படி பிளாஸ்டிக்கை ஒழித்தார் பார்த்தீர்களா"?. சரி குப்பைதொட்டியில் இருந்து அந்த பிளாஸ்டிக் என்ன ஆகிறது? பதில் உண்டா?

பிளாஸ்டிக்கை முறையாக எதுவெதற்க்கு பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து பயன்படுத்தவேண்டும். அதுபோல் மறுமுறை எதற்க்கு பயன்படுத்தலாம் என்று புரிந்து பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு
ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையோ, சிற்றுண்டி பாக்கெட்டையோ பிரிக்கும்போதே சரியாக பிரித்தால் அந்த பிளாஸ்டிக் பையில் ஒரு விதையையே வளரவைக்கலாம். அந்த பையை கண்டவாறு கிழித்து வீசுவதால்தான் பிரட்ச்சனை. அப்படி கிழித்த பிளாஸ்டிக்குகளைகூட சேகரித்து ஒரு பெரிய பையில் அடைத்து அதை ஒரு இருக்கையாககூட செய்யலாம். இப்படியாக பிளாஸ்டிக்கை எப்படி ஆக்கபூர்வமாக மறுபயன்பாடு செய்வது என்று சிந்தனை செய்யவேண்டும்.

பிளாஸ்டிக்கை உருக்கி வேறு வடிவம் கொடுத்து புதிய பொருட்கள் செய்யலாம். உருக்கினால் காற்று மாசு பெரும் என்று கவலைபடாதீர்கள் நிறைய மரங்கள் இருந்தால் சிறு மாசு பெரிய காற்றில் கரைந்து போகும்... ஆகவே மரம் வளர்ப்பீர் பயன் பெருவீர்...

GOOGLE நிறுவனர்கள் (Larry Page and Sergey Brin) தரும் அறிவுரைகள்

GOOGLE நிறுவனர்கள் (Larry Page and Serge y Brien) தரும் அறிவுரைகள்

Larry Page and Sergey Brin
 1.ஒரு விஷயத்தைச் சாதிக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அதன்பிறகு எப்போதும், எதற்காகவும் நேரத்தை, மனிதசக்தியை வீணடிக்கக் கூடாது.விழித்திருக்கிற நேரத்தையெல்லாம், நம்முடைய லட்சியத்துக்குப் பயன்படும் வகையில் ஏதேனும் உருப்படியாகச் செய்வதில்தான் செலவிட வேண்டும்.
 2.பிள்ளைப்பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் விளையாட்டாக கற்றுக்கொள்கிற விசயங்களை, அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். பின்னாளில் அவையே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடும்.
 3.பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லோருக்குமே, அந்தப் பணம் இன்னொருவரிடமிருந்துதான் வந்தாக வேண்டும். ஆகவே அந்த இன்னொருவருக்கு என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்க்கவேண்டும் என்பதில்தான் நமது முதல் கவனம், அக்கறை எல்லாம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களாக மனமுவந்து, நம் சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைத்து விடுப்போவார்கள்.
 4.வெவ்வேறு நபர்கள் ஒரே குழுவாக இணைந்து வேலை செய்யும்போது, ஒவ்வொருடைய பலங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், குழுவின் செயல்திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.
 5.புதுமையான நல்ல விசயங்களைக் கண்டறிவது முக்கியம். அவற்றை மக்களுக்குப் பயன்படும்வகையில் பெரும்பான்மையினரிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம்.
 6.யாரையும் முதல் பார்வை/அனுபவத்தைக் கொண்டு தவறாக எடை போடாதீர்கள்.
 7.தொழில்துறையில் வெற்றியடைய, தலைமைப் பண்புகள் அவசியமானவை. அவை இல்லாவிட்டால், உங்கள் இலக்கு வெறும் கனவுகளோடு நின்றுவிடும்.
 8.இலவச சேவைகளின் மூலமும் தொழிலில் பணம் சம்பாதிக்க முடியும்.
 9.உங்களுடைய கனவுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளவிட்டால், கவலைப்படாதீர்கள், நம்பிக்கை இழக்காதீர்கள். உங்களுடைய கனவுகளை செயல்படுத்திகொண்டே இருங்கள்.
 10.முடிந்தவரையில், நமது தொழிலில் மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்காமல் பார்த்துக்கொண்டால், நம்முடைய லாபத்தை நாமே தீர்மானிக்கலாம், மற்றும் நமக்கு சுதந்திரமும் கிடைக்கும்.
 11.உங்களுடைய நிறுவனத்தை நீங்களே சுய மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். உங்களுடைய தயாரிப்பின் தகுதியை குறிப்பிட்டு, அதற்குரிய விலையை தயங்காமல் கேளுங்கள்.
 12.லாபம் என்பதில், விற்பனை, செலவுகள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றுள் விற்பனையை நாம் ஓரளவுதான் கட்டுப்படுத்தமுடியும். ஆனால், உற்பத்திக்காக நாம் செய்கிற செலவுகள் முழுக்கமுழுக்க நம்முடைய கட்டுபாட்டிதான் இருக்கின்றன. ஆகவே செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள், எல்லோரிடமும் பேரம் பேசுங்கள், லாபம் தானாக அதிகரிக்கும்.
 13.தீயவற்றை செய்யாதீர்கள்!-Do No Evil.
 14.மார்கெட்டிங் ஜாலங்கள், விளம்பரத் தந்திரங்கள் போன்றவற்றைவிட, தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தான் ஒரு நிறுவனத்திற்கு அதிகப் புகழை, கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும்.
 15.நம் தொழிலை விரிவுபடுத்த முதலீடு மிக அவசியம். நம் தொழிலை நம்பி முதலீடு செய்யக்கூடியவர்களைத் தேடிக் கண்டறிவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வகையில் நமது கனவை விவரித்து திருப்திப்படுத்துவதும் மிக முக்கியம்.
 16.உங்களது ஊழியர்களை, அடிமாடுகள்போல் கொடுத்த சம்பளத்துக்கும் மட்டும் வேலை வாங்காமல், அவர்களுடைய படைப்புத்திறனுக்கு மதிப்பளியுங்கள். அவர்களது புதுமையான யோசனைகளை வரவேற்றுச் செயல்படுத்துங்கள். அதன்பிறகு, உங்கள் நிறுவனத்தின் எல்லா வெற்றிக்கும் அவர்களே அடித்தளமாக இருப்பார்கள்.
 17.சிலவிஷயங்கள் காலங்காலமாக இப்படித்தான் செய்யப்படுகின்றன என்பதற்காக நாம் அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்ற அவசியமில்லை. தேவைபட்டால் புதுமையை கையாளுங்கள்.
 18.சில சமயங்களில், வருங்காலத்திற்காக கசப்பான முடிவுகளையும் நாம் எடுக்கவேண்டியிருக்கும். அதற்காக வருந்திகொண்டிருக்காமல் முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
 19.லாபத்தின் ஒரு பகுதியை, உங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் லாபம் குறையாது, லாபம் கூடும்!
 20.பிறரின் விமர்சனத்திற்கு கவனம் செலுத்தாமல், நமது சேவை/ தயாரிப்பின் தரத்தை மேம்படுத்துவதில்தன் நம்முடைய கவனம் இருக்கவேண்டும்.

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை சமைக்கவும்!*

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது  கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக    மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை  மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*

*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!

*அழகான வரிகள் பத்து*.

*அழகான வரிகள் பத்து*.

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

3,நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச் சிறப்பானவர்கள்*

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*

7. சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*

8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்*

9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்*

10.  கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்*

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் 
ஒரு தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*

*எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும்*

இந்த நாள் இனிய நாள்.

வெளிப்படையான பாராட்டுதல்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்..,